kalaignar magalir urimai scheme latest news| மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நவம்பருக்குள் உரிய தீர்வு


 மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நவம்பருக்குள் உரிய தீர்வு



“மகளிர் உரிமைத்தொகை நவம்பருக்குள் உரிய தீர்வு”

kalaignar magalir urimai scheme latest news| மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நவம்பருக்குள் உரிய தீர்வு



தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை பற்றி தெரிவித்த தகவல்கள்... 



1. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.62 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த 1.06 கோடி மகளிர் தேர்வு செய்யப்பட்டனர்... 

2. பெண்கள் சுயமரியாதையுடன் வாழ இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது... 

3. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடி பேருக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தாலும், 1.6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது...

4. மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர், முதியோர் உதவித்தொகை பெறுவோரும் பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன... 

5. மேலும் 2,06,000 மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்; திருநங்கைகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது... 





6. எந்தத் திட்டத்திலும் மேல்முறையீடு இருக்காது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புள்ளது; தகுதியானவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம்... 

7. இப்போது மேலும் 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள், அதையும் நாங்கள் பரிசீலிப்போம்; தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயம் தொகை வழங்கப்படும்... 

8. மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத புதிய விண்ணப்பதாரர்களுக்கு கூடிய விரைவில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது அதற்கான அறிவிப்பு இனிமேல் வெளியாகும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்... 

9. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம்; அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எந்த ஒரு தகுதியான பயனாளியின் வாய்ப்பும் விட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது

10. இந்த மாதம் வரும் அக்டோபர் 14ம் தேதியே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் , கடந்த மாதமும் 14 ஆம் தேதியே வங்கி கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது... 





11. மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வசதி படைத்தவர்கள், தாமாக முன்வந்து திட்டத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் கீதா ஜீவன் கோரிக்கை... 

12. நவம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் உரிய தீர்வு கிடைக்கும்... 



kalaignar magalir urimai scheme latest news



    மேலும் கூடுதலாக கிடைத்த தகவல்கள்


இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 25 நாட்களுக்கு மேலாக விண்ணப்பதாரர்களுக்கு Status பரிசீலனை மற்றும் கள ஆய்வு உள்ளவர்களுக்கு உடனடியாக வருவாய் துறை கள ஆய்வு நடத்தபட உள்ளது இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் நடந்த வாய்ப்பு உள்ளது... 

அதுமட்டுமின்றி புதிய விண்ணப்பம் பெற முகாம் நடத்த அல்லது உதவி மையம் வைக்க வாய்ப்பு உள்ளது... 
மேல்முறையீடு செய்ய நேரடியாக இ சேவை செல்லுவது மட்டும் இல்லாமல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்று தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வேற ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் வருவாய் கோட்டாட்சியர் இடமே முறையிடலாம்...




அதுமட்டுமின்றி முக்கியமான தகவல் ஒன்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதல் தவணை ரூபாய்.1000 மணியாடர் மூலம் தபால் நிலையத்தில் யார் யார் பெற்று இருந்திர்களோ அவர்கள் அனைவரும் தபால் நிலையத்தில் IPPB BANK ACCOUNT OPEN செய்ய வேண்டும் மேலும் அந்த IPPB BANK ACCOUNT- ல் தங்களது ஆதார் கார்டை லிங்க் செய்ய வேண்டும் அவ்வாறு செய்பவர்களுக்கு அடுத்த தவணை அதாவது இரண்டாவது தவணை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கே வந்து சேர்ந்துவிடும்...





இரண்டாம் தவணை தடையில்லாமல் பெறுவதற்கு கட்டாயம் இவை அனைத்தும் நீங்கள் செய்ய வேண்டும் , கூடுதலாக நிராகரிக்கப்பட்டு இ சேவை மூலம் மேல்முறையீடு செய்து Approved ஆனவர்களுக்கு இந்த இரண்டாம் தவணை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அக்டோபர் 14ஆம் தேதி கிரெடிட் செய்யப்படும்...

மேலும் Approved ஆகாதவர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் தங்களது மனுவை அளிக்கலாம் அல்லது CM Helpline-க்கு தொடர்பு கொள்ளலாம்...





மேலும் இந்த Article 📰 பற்றி கூடுதல் தகவல் வேண்டும் என்றால் கீழே உள்ள YOUTUBE VIDEO- வை காண்க... 👇

VIJAY D TECH

Post a Comment

0 Comments