Kalaignar Magalir urimai thogai melmuraiyeedu lastest news | மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 விண்ணப்பம் ஏற்பு


Kalaignar Magalir urimai thogai melmuraiyeedu lastest news | மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 விண்ணப்பம் ஏற்பு


Kalaignar Magalir urimai thogai melmuraiyeedu lastest news | மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 விண்ணப்பம் ஏற்பு


கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இந்த திட்டத்தில் தற்சமயம் மேல்முறையீடு செய்தவர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 48 ஆயிரம்  மகளிர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஜூலை மாதம் முதல் புதிய விண்ணப்பம் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதைப் பற்றி தெளிவான விளக்கங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் விரிவாக பார்ப்போம், மேலும் விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதையும் விவரமாக பார்ப்போம்.


KMUT Latest Updates


KMUT OFFICIAL WEBSITE

👇

KMUT WEBSITE HERE


தாவது தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் மகளிர் உரிமைத் தொகையில் இதுவரை ஒரு கோடியே 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் பயனடைந்து வருகிறார்கள் அதில் கூடுதலாக ஒரு லட்சத்து 48 ஆயிரம் மகளீர்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தற்சமயம் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர்.


இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் அதாவது 2023 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார் அதனைத் தொடர்ந்து முதல் தவணையாக செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து மகளிர்களின் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு நேரடியாக DBT ( Direct Benifit Transfer ) டிரான்ஸ்பர் மூலம் ரூபாய் ரூ.1000 மாதம் தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.


இதுவரை ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட பத்து தவணை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த திட்டத்தில் இடையில் மேல்முறையீடு செய்தவர்கள் அதாவது கிட்டத்தட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு மேல் இ சேவை மூலமாக மேல்முறையீடு செய்திருந்தனர் அதில் தகுதியானவர்களில் சிலர் 2024 ஜனவரி மாதம் முதல் பயனடையிலாக இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் மேல் பயனாளி வரை இணைக்கப்பட்டது .


அதைத் தொடர்ந்து தற்சமயம் லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் ஜூலை மாதத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்பு என்ற தகவல் வெளியாகி உள்ளது இது அரசிடம் இருந்து கிடைத்த முக்கியமான தகவல் ஆகும் மேலும்  இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 2024 - 2025  நிதி ஆண்டுகளில் சுமார் 13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.


Kalaignar Magalir urimai thogai melmuraiyeedu lastest news | மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 விண்ணப்பம் ஏற்பு


மேலும்  இந்தத் திட்டத்தில் புதிய விண்ணப்பம் விரைவில் வர உள்ளதாக தகவலும் வெளியாகி உள்ளது அதாவது இதற்கு முன் நடந்த தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விண்ணப்பிக்க தவறி இவர்களுக்கு கண்டிப்பாக புதிய விண்ணப்பம் செய்ய முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார் மீண்டும் ஒரு வாய்ப்பு புதிய விண்ணப்பத்திற்கு வரும் என்றும் அறிவித்திருந்தார் மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.


இதைத்தொடர்ந்து ஜனவரி மாதம் புதிய விண்ணப்பம் வரும் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் லோக்சபா தேர்தல் காரணத்தினால் புதிய விண்ணப்பம் தற்சமயம் வரை வரவில்லை ஆனால் இப்பொழுது ஜூலை மாதம் முதல் புதிய விண்ணப்பம் பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர் அவ்வாறு ஜூலை மாதம் புதிய விண்ணப்பம் வரும் பட்சத்தில் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் தங்களது அனைத்து ஆவணங்களையும் உடனடியாக தயார் படுத்தி வைத்துக் கொண்டால் நல்லது.


இந்த திட்டத்தில் புதிய விண்ணப்பத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு அதிக வாய்ப்பு யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட உள்ளது என்று ஒரு சில தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது அதாவது யாருக்கெல்லாம் ரூபா 1000 இந்த முறை வழங்கப்படலாம்.

1. புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பித்து பெற்று இருப்பவர்களுக்கு வழங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது அதிலும் தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படலாம்.

2. தமிழ்நாடு முன்னாள் அரசு ஊழியர்கள் முன்னாள் அரசு அதிகாரிகளின் மனைவிகளுக்கு வழங்கப்படலாம் என தகவலும் வெளியாகி உள்ளது.

3. மேலும் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

4. மேலும் புதிதாக திருமணம் ஆகி உள்ளவர்களும் விண்ணப்பித்து பயன்பெற முடியும் அவர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னவென்று தற்சமயம் பார்ப்போம்.

1. குடும்ப அட்டை ( Smart Ration Card )
2. ஆதார் கார்ட் ( Aadhaar Card )
3. மின் கட்டண ரசீது ( TNEB BILL )
4. வங்கி கணக்கு விவரம் ( Bank Passbook )
5. இருப்பிடச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் தேவைப்பட்டால்.
6. மொபைல் நம்பர் ( Phone Number )
7. புகைப்படம் தேவைப்பட்டால்.


இதில் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் வைத்து உங்கள் பகுதியில் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க முகாம் நடக்கும் பொழுது இந்த ஆவணங்கள் அனைத்தையும் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எளிதில் விண்ணப்பித்து ரூபாய் ஆயிரம் பெற முடியும் மேலும் இது சம்பந்தமாக உங்களுக்கு தெளிவான அப்டேட் மற்றும் வீடியோக்கள் வேண்டும் என்றால் VIJAY D TECH என்ற YOUTUBE சேனலில் உள்ள வீடியோவை தொடர்ந்து காண்க மேலும் இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் (Comment) பாக்ஸில் தெரிவிக்கவும் நாங்கள் உடனடியாக பதில் ( Reply ) அளிப்போம்.

Post a Comment

0 Comments