கலைஞரின் கனவு இல்லம் | kalaignar kanavu illam | இலவச வீடு வழங்கும் திட்டம் 2024 | kalaignar veedu thittam 2024 online apply | kalaignar kanavu illam apply online
" கலைஞர் கனவு இல்லம் ! " ஏழை மக்களே! சூப்பர் அப்டேட் :
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ? இந்த திட்டத்தில் புதிதாக 40,000 ஆர்டர்கள் கிடைத்துள்ளன, அது யார் யாருக்கு ? என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 40,000 பயனாளிகளுக்கு மேல் இல்லம் கட்டுவதற்கான Order Copy அதாவது வீடு கட்டுவதற்காக பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பித்த மீதியுள்ள பயனாளிகளுக்கு இந்த ஆண்டில் அதாவது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 2024 அன்று பணி ஆணை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி. மு. க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, தி. மு. க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடிசைப்பகுதி இல்லாத தமிழ்நாட்டை இலக்காகக் கொண்டு கலைஞர் கனவு இல்லத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 அன்று தமிழக சட்டசபையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டில் உள்ள குடிசைப்பகுதிவாசிகளுக்கு கான்கிரீட் கூரைகளுடன் கூடிய புதிய வீடுகளைக் கட்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கலைஞரின் கனவு இல்லம் ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்பு :
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசு ஆணையை வெளியிட்டது. அதில், பயனாளிகளின் தகுதி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித் துறை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசு ஆணையை வெளியிட்டது. அதில், பயனாளிகளின் தகுதி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு 2024 25 நிதி ஆண்டில் சுமார் 3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீடுகள் இந்த நிதி ஆண்டில் கட்டித் தரப்பட உள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் அளவு விவரம் :
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் சமையலறையுடன் 360 சதுர அடி இருக்க வேண்டும். விதிமுறைகளின்படி, 300 சதுர அடி கான்கிரீட் (ஆர். சி. சி) கூரையால் மூடப்பட வேண்டும், மீதமுள்ள 60 சதுர அடி பயனாளிகளின் விருப்பப்படி தீ தடுப்பு பொருட்களால் மூடப்பட வேண்டும்.
சொந்த பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு வீட்டைக் கட்ட தகுதியுடையவர்கள். புறநகரில் வசிக்கும் மக்கள் வீடுகளைக் கட்ட முடியாது. மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் சொந்தமாக காங்கிரட் வீடுகள் வைத்திருக்கக் கூடாது, அப்படி கான்கிரீட் வீடுகள் ஏற்கனவே இருந்தால் கண்டிப்பாக விண்ணப்பிக்க முடியாது. மீறி அப்படி விண்ணப்பித்தால் கண்டிப்பாக நிராகரிக்கப்படுவார்கள்.
இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கலாகர் கனவு இல்லத் திட்டத்தின்படி, ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 3 லட்சம் 50 ஆயிரம். இதில், ரூ. 3.10 லட்சம் நிதி உதவியும், மீதமுள்ள 40,000 ரூபாய் கட்டுமானப் பொருட்களுக்காகவும் வழங்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளின் தேர்வு ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பயனாளிகளின் பட்டியல் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த ஆண்டில்தான் ஒரு லட்சம் புதிய வீடுகளைக் கட்ட தமிழக அரசு இலக்கு வைத்துள்ளது.
இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தற்சமயம் தெளிவான விளக்கத்துடன் பார்ப்போம் :
இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தங்களது கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி மன்ற தலைவர் அல்லது ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஊராட்சி பொறியாளர் போன்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் இந்த திட்டத்தைப் பற்றி கேட்டறிய வேண்டும் பிறகு அவர்களிடம் நான் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தயாராக உள்ளேன் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னவென்று கேட்கவும்.
பிறகு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் எங்கு பெற வேண்டும் அதையும் கேட்ட பிறகு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும் பிறகு அவர்கள் நீங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று கல ஆய்வு செய்வார்கள் பிறகு நீங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பமா மற்றும் காங்கிரிட் வீடு உங்களுக்கு ஏற்கனவே இருக்கிறதா என்று கல ஆய்வில் உறுதி செய்வார்கள்.
மேலும் அதன் பிறகு உங்களது பெயர் பட்டியலை இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இணைப்பார்கள் அதன்பிறகு உங்களுக்கு இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவார்கள் அதன் பிறகு உங்களது விண்ணப்பம் அரசிடம் இருந்து ஏற்கப்பட்ட உள்ளது என்று வரும் பட்சத்தில் உங்களுக்கு வீடு கட்ட Order Copy செலுத்தப்படும்
இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அரசிடம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னவென்று தற்சமயம் தெளிவாக பார்ப்போம் :
- ஆதார் கார்ட்
- குடும்ப அட்டை
- வங்கி கணக்கு விவரம்
- வங்கி பாஸ் புத்தகம்
- இடத்தின் பத்திரம்
- பட்டா சிட்டா
- மொபைல் நம்பர்
- மின்சார கட்டண ரசீது
- வீடு கட்டும் இடத்தில் முழு முகவரி
- இடத்தின் புகைப்படம்
மேலும் தற்சமயம் வெளியான செய்தியின் படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 40,000 பயனாளிகளுக்கு மேல் காங்கிரட் வீடு கட்டுவதற்கான Order copy அதாவது வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி விளக்கமாக கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான மீதமுள்ள வீடு கட்டப்படும் பயனாளிகளுக்கு உத்தரவு வரும் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வழங்கப்பட வாய்ப்புள்ளது. www.tipps.in
மேலும் இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உங்களுக்கு தெளிவான விளக்கம் வீடியோ வடிவில் வேண்டுமென்றால் VIJAY D TECH என்ற youtube சேனலில் உள்ள கலைஞர் கனவு இல்லம் வீடியோவை காண்க அதில் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்னென்ன ஆவணங்கள் தேவை விண்ணப்ப படிவம் எங்கு பெறுவது போன்ற பல்வேறு விதமான கேள்விக்கான பதிலை வீடியோ வடிவில் பதிவு செய்துள்ளேன் அதில் நீங்கள் சுலபமாக கேட்டு பயன்பெற முடியும் அந்த வீடியோவின் லிங்கை கீழே கொடுக்கிறேன் அல்லது நீங்கள் youtube-யில் சென்று கலைஞரின் கனவு இல்லம் VIJAY D TECH யூடியூப் சேனல் என்று Search செய்தால் உடனே முதல் வீடியோவாக வரும்.
0 Comments
Thank you for your comment